Apr 23, 2011

நீயும் நானும்


யுகமாய் தெரிந்த நொடிகள்.!
நொடியாய் கடந்த பொழுதுகள்.!
பேசிக்கொண்டே விடிந்த இரவுகள்.!
எல்லாம் நினைவுகளாய்..........!!!

எது சேர்த்தது..........!?!
எது பிரித்தது...........!?!
புரியாமலே பிரிந்தோம்.

வேண்டாத எல்லாம் விட்டு கொடுத்தோம்.
வேண்டும் போது வீம்பாய் நின்றோம்.........!!!

இதை நீயும் நினைப்பாய்
சொல்லத்தான் மறுப்பாய்....!!!

நினைவுகள் மட்டும் நெஞ்சோடு
ஆம் நீயும் நானும் காதலித்தோம்!
என்பது மட்டுமே இப்போது........!!!   -*சௌந்தர்*

1 comment:

  1. நினைவின் மொழியும், பிரிவின் வலியும்........beautiful....

    ReplyDelete