Apr 28, 2011

"காதல்"



என் வாழ்க்கை பயணத்தின்
ஏதோ ஒரு மூலையில் மூச்சு
விட்டு கொண்டு இருப்பேன்........!

உன் நினைவுகள்
எனக்கு உயிர் வழங்கி
கொண்டு இருக்கும்......!

உன் மகன் வளர்ந்து
ஒரு நாள் உன்னிடம் கேட்க கூடும்
'அம்மா'..! "காதல்" என்பது தீவிரமானதா..? என்று
அன்றைக்காவது என் நினைவு உனக்கு வந்தால்
அழைத்து வந்து காட்டு என்னை.....!!!

பிறகு சொல்
"இவனும் ஒரு காதல் தீவிரவாதிதான்"
"இன்னமும் என்னை நேசித்துக்கொண்டு இருக்கிறான்"
"கிடைக்காது என்று தெரிந்த போதும்"...!?!"என்று.

உன் மகன் என்னிடம் கேட்க கூடும்
"காதல் வலிக்கிறதா என்று..?
நிச்சயமாய் உன் சமயோசித முடிவை பற்றி
ஏதுவும் சொல்ல மாட்டேன்....!
சொல்லுவேன் "காதல் வலிக்கவில்லை".
ஆனால் "காதல் வலியது" என்று......!

நீ போன பிறகு
உன் உடைந்த ஒற்றை
வளையலை தழுவியபடி
உயிர் விடுவேன்
நீ போன வழி பார்த்த படியே.......!!!    -*சௌந்தர்*

Apr 27, 2011

உன் சிற்றிதழ் முத்தம்....!


ஏதோ சொல்ல நினைத்து
ஏதேதோ சொல்கிறேன்
என் கவிதை என்று கூறி.......!

அதையும் சலிக்காமல்
படித்து "அருமை" என்கிறாய்.....!

என் காதருகில் உன் இதழ் குவித்து
உன் சிற்றிதழ் முத்ததிற்காகவே
சுற்றி சுற்றி வரும் என் கவிதை சுளைகள்........! -*சௌந்தர்*

Apr 24, 2011

புகார்


பார்க்கும் இடமெல்லாம்
வந்து ஆக்கிரமிக்கிறாய்
பொறுத்து பார்த்து
புகார் கொடுக்க ஓடினேன்.......!!!

புகார் வாங்கும் அதிகாரியாகவும்
நீயே சிரிக்கிறாய்....!!!
புகுந்து கொண்டு உயிரை வதைக்கிறாய்......!!!  -*சௌந்தர்*

Apr 23, 2011

நீயும் நானும்


யுகமாய் தெரிந்த நொடிகள்.!
நொடியாய் கடந்த பொழுதுகள்.!
பேசிக்கொண்டே விடிந்த இரவுகள்.!
எல்லாம் நினைவுகளாய்..........!!!

எது சேர்த்தது..........!?!
எது பிரித்தது...........!?!
புரியாமலே பிரிந்தோம்.

வேண்டாத எல்லாம் விட்டு கொடுத்தோம்.
வேண்டும் போது வீம்பாய் நின்றோம்.........!!!

இதை நீயும் நினைப்பாய்
சொல்லத்தான் மறுப்பாய்....!!!

நினைவுகள் மட்டும் நெஞ்சோடு
ஆம் நீயும் நானும் காதலித்தோம்!
என்பது மட்டுமே இப்போது........!!!   -*சௌந்தர்*

Apr 21, 2011

ஏக்கம்


மழையின் துளிகள் எல்லாம்
பிடித்துவிட ஆசைதான்
தன்மேல் விழுந்த
கடைசி துளியைகூட
விளிம்புவழி ஒழுகவிட்ட
இந்த இலைகளுக்கு.......!!!      -*சௌந்தர்*