நீ
தீர்ப்பெழுது
குற்றவாளி என்று......!
இதய சிறைக்குள்
இடு சந்தோசப்படுகிறேன்....!
மாறாக விடுதலை
செய்து மட்டும் வெளியேற்றி
விடாதே வேதனைப் படுவேன்.......!
பார்வை தோட்டாக்களால்
சல்லடையக்கு சந்தோசப்படுகிறேன்......!
ஆயிரம் கண்கொண்டு
உன் அழகை ரசிக்க
அதுதானே அற்புத வாய்ப்பு.......!
காதலுக்கு குறுக்கே
நிற்பது எம்மதமானாலும்
எதிர்க்கத் தயார்.....!
உன் சம்மதம் மட்டுமே
சண்டித்தனம் செய்கிறது........!
உன்னைப் பற்றி
எழும் எண்ணங்களை
எவ்வளவு தான் ஆழப் புதைத்தாலும்
தண்ணீரில் அழுத்திய பந்தை தானே
மேலெழுந்து வருகிறது......!
ஓ....!
நான் இன்பக் கடலில் மிதப்பது
எப்படி என்று இப்போது புரிகிறது.......!
உன் எண்ணங்களுக்கே
இப்படி உன்னத வலிமை இருக்கிறதென்றால்
உன் கை பற்றினால் எப்படி இருக்கும்.......!
தூக்கு என்று தீர்ப்பெழுதினாலும்
கைக்கொடுத்து தூக்குவாய்
என நம்பியே காத்திருப்பேன் உனக்காக........! -*சௌந்தர்*

No comments:
Post a Comment