நான் மனிதன் இல்லை
அவளிடம் நான் இல்லை அதனால்
என்னை விட்டு அவள் பிரிந்தாலும்
நான் வாழ்வேன்
அவள் நினைவின் சுவடுகளோடு.......!
என் பெற்றோருக்காக,நண்பருக்காக
வாழ வேண்டுமென்ற கட்டாயம்
என் வாழ்வில் "அவளை பிரிந்து".....!
திருமணம் என்ற கட்டாயமோ,
அவள் வாழ்வில் "என்னை பிரிந்து"......!
கனவுகள் விரக்தி
எனது வாழ்வில்
அவள் நிலையை எப்படி சொல்வேன்
காயங்களும் சுகங்களே
எனது கண்ணீரும் சுகங்களே-எனினும்
இறைவனை வேண்டுகிறேன்
அவள் வாழ்.....! -*சௌந்தர்*

No comments:
Post a Comment