Sep 19, 2011

"கனவாய் என் காதல்"

நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது 
வழுக்கிவிழுந்து.....!
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்...!
....துடித்தேன்…..
புறப்பட்டேன் உன்னை காண.......! 

வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...!
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...!
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே...!.
கண்களின் ஓரம் கண்ணிர்துளி…!.
அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று…..! 

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு…..!
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....!
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்.....!
வரவேற்றாய்...!

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ….!
எந்த விரல்கள் வீங்கியது காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய....!
உன் பாதங்களை காட்டினாய்….!

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...!
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு...! உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....!

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....!
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....!
என் கண்களும் கலங்க தொடங்கியது…!
உன் கண்களில்...!!!
தாரை தாரையாக கண்ணீர்….!
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...!
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ….!
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில் 
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்......!
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன்….! 
உன் கண்ணிரைக் கண்டதுமே...!
என் கண் கலங்க....!
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்...!
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை….!
அத்தனையும் பார்த்தபடி 
உன் அன்னை……..!       -*சௌந்தர்*

No comments:

Post a Comment