Sep 12, 2011

நட்பு


கார்மேகம் போல்
இடை தொட்ட கருங்கூந்தல்....!

கன்னம் குழிவிழ சிந்தும்
இதழோர புன்னைகை........!

மெல்ல சிணுங்கும்
கொலுசொலி............!

ஒளி உமிழும்
கலங்கரை விழிகள்........!

தோற்காமல் தொடரும்
வைராக்கிய மௌனம்.........!

தலை தாழ்த்தி சங்கடமாய்
என்னை கடக்கும் அதிவேக
நிமிடங்கள்...........!

முட்களில் விழுந்தாலும்
காயப்படாமல்
பள்ளத்திலிருந்து மீண்டு
பயணிக்கும் நம்
நட்பு............!!!                  -*சௌந்தர்*

No comments:

Post a Comment